சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது அவர் குறிப்பிட்டார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் கூறினார்.
 


Next Story

மேலும் செய்திகள்