குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்து : சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்து : சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி
x
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை இல்லாததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து சீரான தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் கூட்ட நெரிசலின்றி குளித்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்