சென்னையில் இன்று பழமையான கார்கள் கண்காட்சி

சென்னை திருவான்மியூரில் பழமையான கார்கள் கண்காட்சி இன்று நடக்கிறது.
சென்னையில் இன்று பழமையான கார்கள் கண்காட்சி
x
சென்னை திருவான்மியூரில் பழமையான கார்கள் கண்காட்சி இன்று நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, நடிகை ரேவதி துவக்கி வைக்கிறார். பழமையான மற்றும் புராதனமான 140-க்கும் மேற்பட்ட கார்களும், 40-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் கண்காட்சியில் பங்கு பெற உள்ளன. 1920 முதல் 1970-ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்த ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார், எம்.ஜி. டார்ஜ் பிரதர்ஸ், செவர்லெட், போர்டு, பியட், ஆஸ்டின் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற நிறுவனங்களின் சிறந்த பராமரிப்பில் உள்ள வாகனங்கள் பங்கு பெறுகின்றன. சிறப்பாக பராமரிக்கப்பட்ட வாகனங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்