விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை - சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சிறப்பு நீதிபதி விசாரணை

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை - சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சிறப்பு நீதிபதி விசாரணை
x
விடுதலைப் புலிகள்  இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை காலம், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட தீர்ப்பாய  நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல், ஆகஸ்ட் மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சென்னையில் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை சேப்பாக்கத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வைகோ மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்