விபத்துக்கு காரணமாகும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் : துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? - உயர் நீதிமன்றம்

விபத்துக்கு காரணமாகும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்துக்கு காரணமாகும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் : துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? - உயர் நீதிமன்றம்
x
மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் 2015 ஆம் ஆண்டில் வழங்கிய ஒரு தீர்ப்பை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம் மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, அரசுப் போக்குவரத்து கழகங்களின் சேவை நோக்கம் சிதைந்து விட்டதாக வேதனை தெரிவித்தனர். போக்குவரத்து கழகங்களை அரசுடமையாக்கியதை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் உள்ளதா என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்