"வேலூர் மாவட்டம் 3ஆக பிரிக்கப்படும்" - முதலமைச்சர் பழனிசாமி
சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளது என்றார்.
சுதந்திர தின உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட உள்ளது என்றார். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் 15 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இதுபோல, நவம்பர் 1ம் தேதியை 'தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் அரசு விழாவாக இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படும் எனவும் அவர் கூறினார்.
Next Story