ஆதரவற்றோர் காப்பகத்தில் அரங்கேறிய கொடுமை, சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறல்

தனியார் காப்பகத்தில், தங்கி படித்துவந்த 4 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காப்பகத்தின் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஆதரவற்றோர் காப்பகத்தில் அரங்கேறிய கொடுமை, சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறல்
x
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 25 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் தங்கி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், காப்பகத்தில் பணிபுரியும், ஆதிகேசவன் என்பவர் நான்கு சிறுமிகளை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக  கிடைத்த தகவலின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், விசாரணை நடத்தினர். காப்பகத்தில் உள்ள சிறுமிகளிடம் விசாரித்த‌தில், பாலியல் தொந்தரவு செய்த‌து உறுதியானதை அடுத்து, ஆதிகேசவனை கைது செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த மாதர் சங்கத்தினர், மற்ற குழந்தைகளிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்