நீலகிரி வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட உள்ளார்.
நீலகிரி வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடுகிறார் ஸ்டாலின்
x
நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட உள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10. 45 மணிக்கு கோவை சென்றடையும் ஸ்டாலின்,  அங்கிருந்து கார் மூலம் உதகை புறப்பட்டு செல்கிறார். செல்லும் வழியில் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் ஸ்டாலின்,  நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களையும் பார்வையிடுகிறார். நாளை குருத்துக்குறி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறும் ஸ்டாலின், அன்று மாலை கோவை திரும்புகிறார்.
 


Next Story

மேலும் செய்திகள்