மடிக்கணினி வழங்கும் விழா-செங்கோட்டையன் பங்கேற்பு
சென்னையை அடுத்த பல்லாவரத்தில், 26 பள்ளிகளை சேரந்த 10 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில், 26 பள்ளிகளை சேரந்த 10 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடி கணினிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், நடப்பாண்டில் 15 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றார். மேலும், மத்திய அரசு அனுமதி பெற்று எட்டு, ஒன்பது மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20 லட்சம் டாப் (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story