ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
x
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி இந்த ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டத்திற்கு முன்னதாக காலை 5 மணிக்கு ஆண்டாள் மற்றும் ரங்கமன்னருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தொடங்கிய தேரோட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் ஆட்சியர் சிவஞானம், நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்களும் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் இங்கு1600க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்