"கரூரில் பட்டப்பகலில் இருவர் வெட்டி கொலை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு"

கரூர் மாவட்டத்தில், ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடுத்த மகனும் தந்தையும், மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் குடும்பத்தோடு வசித்து வந்தவர் நல்லதம்பி. ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற, இவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். அப்போது, நல்லதம்பியின், தந்தை ராமர் என்ற வீரமலை, அங்கு வந்த நிலையில், அவரையும் மர்ம நபர்கள் கொலை செய்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்