தந்தி டிவி செய்தி எதிரொலி : "குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்"

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் 134 கிராமங்களில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்பட்டது. இது தொடர்பான செய்தி தந்தி டிவியில் வெளியானதை தொடர்ந்து, குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தடைபட்ட குடிநீர் வினியோகம்  இரண்டு நாட்களில் படிப்படியாக சீரடையும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்