"காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு"

சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.
x
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விதி 110-இன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், புற்றுநோய் மேன்மை மையம், ஏற்படுத்தி தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், 50 கோடி ரூபாய் செலவில் 10 போக்குவரத்து பணிமனைகள்  நவீனப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். கரூரில் பால் உற்பத்தியாளர் ஒன்றியம் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்