புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
x
புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண பா.ம.க சார்பில் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ம.க அலுவலகத்தில்,  அக்கட்சியின் 31-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தேர்தலில்  ஏ.சி சண்முகம் வெற்றி பெறுவார் என்றும், அதற்கு பா.ம.க. உறுதுணையாக இருக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்