காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...

விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
x
பெருந்தலைவர் காமராஜரின் 117 பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது மணி மண்டபம் விருதுநகரில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அறங்காவலருமான சரத்குமார் முயற்சியால் காமராஜர்  மணிமண்டம் கட்டப்பட்டுள்ளது. விருதுநகர் நுழைவாயிலில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டப திறப்பு விழா, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை அனைவரையும் ராதிகா சரத்குமார் வரவேற்றார். பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்