"மழைநீர் சேகரிப்பு அமைப்பு அரசு அலுவலகங்களில் ஏன் செயல்படாமல் உள்ளது?" - அமைச்சர் சம்பத் கேள்வி

மழைநீர் சேகரிப்பு அமைப்பு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏன் செயல்படவில்லை என அமைச்சர் சம்பத் கேள்வி எழுப்பினார்.
மழைநீர் சேகரிப்பு அமைப்பு அரசு அலுவலகங்களில் ஏன் செயல்படாமல் உள்ளது? - அமைச்சர் சம்பத் கேள்வி
x
மழைநீர் சேகரிப்பு அமைப்பு அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏன் செயல்படவில்லை என அமைச்சர் சம்பத் கேள்வி எழுப்பினார். கடலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதை சமாளிக்கவும், மழைநீர் சேகரிப்பை வலுப்படுத்தவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், மழைநீர் சேகரிப்பு அமைப்பை அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.  தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் சம்பத், இதுதொடர்பாக துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வாரத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்