மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மழை வேண்டி வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை என முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
இந்து சமய ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மழை வேண்டி வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை என்று முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மத தலங்களிலும் மழைக்காக வழிபாடு நடத்துவதுபோல, இந்து ஆலயங்களிலும் வழிபாடு நடக்கிறது என்றும், ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்,  வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை என்றும் கூறினார். கூடங்குளம் அணுக்கழிவு விவகாரத்தை பொறுத்தவரை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது என்றும், திடீர் விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றுவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்