முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை - தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
தூத்துக்குடி மாவட்டம், வீரப்பாண்டியன்பட்டிணத்தில்,  முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகிலுள்ள வீரபண்டியன்பட்டிணம் மீனவ கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். இப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்கு மட்டும், பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. மற்ற பகுதிகளுக்கு மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும், தாமிரபரணி பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்