விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

மதுரை விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
x
மதுரை விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தார்.  மதுரையில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி திடீரென டயர் வெடித்ததில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த  லாரிஓட்டுநர் உட்பட 4 பேர்  காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தன்னுடன் வந்த பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் நேரடியாக மருத்துவமுனைக்கு சென்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மருத்துவர்களிடம் காயமடைந்தவர்கள் நிலை குறித்து கேட்டறிந்தார். 

Next Story

மேலும் செய்திகள்