ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை - துணிக்கடை திறப்பு விழாவில் விநோதம்

காரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பனை செய்யப்பட்டதால், அங்கு மக்கள் வெள்ளம் போல் திரண்டனர்.
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பனை செய்யப்பட்டதால், அங்கு மக்கள் வெள்ளம் போல் திரண்டனர். ஐந்து விளக்கு பகுதியில் புதிதாக தனியார் கடை திறப்பு விழாவில், முதலில் வரும் 599 பேருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை வழங்கப்பட்டது. இந்த செய்தியை அறிந்த மக்கள், சட்டையை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் கடைக்கு முன் காத்திருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்