பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வர‌ர் கோவிலில் முத்துபந்தல் விழா : பார்வதி தேவி திருஞான சம்மந்தரின் பசியாற்றும் வைபவம்

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வர‌ர் கோவிலில், பார்வதி தேவி திருஞான சம்மந்தரின் பசியாற்றும் வைபவம் நடைபெற்றது.
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வர‌ர் கோவிலில் முத்துபந்தல் விழா : பார்வதி தேவி திருஞான சம்மந்தரின் பசியாற்றும் வைபவம்
x
கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வ‌ரர் கோவிலில், வைகாசி மாத, முத்துபந்தல் விழா நடைபெற்றுவருகிறது. முதல் நாளான இன்று, திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவி பசியாற்றும் வைபவம் நடைபெற்றது. புராணத்தின்படி, கோவிலின் குளக்கரையில் திருஞான சம்மந்தர் பசியால் அழ, பார்வதி தேவி அவருக்கு பசியாற்றியதாகவும், இதைதொடர்ந்து சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதி ரிஷப வாகனத்தில் வானில் காட்சியளித்த‌தாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை சுட்டிக்காட்டும் வைபவம், கோவில் குளத்தின் கரையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்