கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் காலில் காயமடைந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதி பவளக்குட்டை கிராமத்தில் விவசாய தோட்டப்பகுதியில் ஆண்யானை உடல்நலம் குன்றி படுத்துள்ளது. அப்பகுதி மக்களில் தகவல்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் , சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்துள்ளனர். காலில் பலமான காயம் ஏற்பட்டிருந்ததால் எழுந்து நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்த யானை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 


Next Story

மேலும் செய்திகள்