"சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்" : கலாநிதி வீராசாமி
வடசென்னை தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முடிவு செய்துள்ளார்.
வடசென்னை தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முடிவு செய்துள்ளார். இதற்காக,சென்னை சிந்தாரிபேட்டையில் உள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய இயக்குநரை சந்தித்து மனு அளித்தார். சொந்த செலவில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க முடிவு செய்திருப்பதாகவும், அந்த குடிநீர் தொகுதி மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தியதாகவும் கலாநிதி வீராசாமி தெரிவித்தனர்.
Next Story