"பொறியியல் கலந்தாய்வு ஜீலை 3 ஆம் தேதி தொடங்கும்" - அமைச்சா் கே.பி.அன்பழகன்

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
x
பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ​ர், கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 42 ஆயிரம்  இடங்களுக்கு சேர்க்கை நடைபெற்றதாக தெரிவித்தார். நடப்பாண்டு, ஒரு லட்சத்து 72 ஆயிரம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும், கலந்தாய்வின் போது மாணவர்கள் எத்தனை கல்லூரிகள் வேண்டுமானாலும் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜுலை 3 ஆம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்