பைனான்சியரை கொல்ல கூலிப்படையை ஏவிய 2வது மனைவி...

பைனான்சியர் இளங்கோவனின் இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் அவரது மகள் அனுசுயா ஆகியோர் கூலிப்படையை ஏவிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
x
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வசித்து வரும் பைனான்சியர் இளங்கோவன் கடந்த வெள்ளிக்கிழமை, மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் இரு சக்கர வாகனத்தில் வரும் 6 பேர் கொண்ட கும்பலில் நான்கு பேர் முகமூடி அணிந்து கொண்டு செல்கின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் முன் நின்றிருந்த இளங்கோவனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு அவர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் நடத்திய  விசாரணையில், இளங்கோவனின் இரண்டாவது மனைவி அபிராமி மற்றும் அவரது மகள் அனுசுயா ஆகியோர் கூலிப்படையை ஏவிக் கொலை செய்தது தெரிய வந்தது. கொலையாளிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்