"முறைகேட்டில் ஈடுபட்டால் டிஸ்மிஸ்" - உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் சர்மா அதிரடி

முறைகேட்டில் ஈடுபட்டால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அறிவித்துள்ளார்.
முறைகேட்டில் ஈடுபட்டால் டிஸ்மிஸ் - உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் சர்மா அதிரடி
x
முறைகேட்டில் ஈடுபட்டால் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அனைத்து அதிகாரிகளும் விரைவில் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் முறைகேடு புகாரில் சிக்கும் அதிகாரிகள் மீது இனிமேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், விடைத்தாள் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.  இது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்