5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, போக்சோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவர் கைது
ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ராணிப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, ராணிப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. லாரி ஓட்டுநரான அவர், அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனை அறிந்த அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ராணிப்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story