நெல்லை: என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

நெல்லை, பாளையங்கோட்டையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது.
நெல்லை: என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
x
நெல்லை, பாளையங்கோட்டையில் என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது. பள்ளி மைதானம் ஒன்றில் நடைபெற்று வரும் இந்த பயிற்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். வருகிற 29ம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல்,  வெடி பொருட்களை கையாளுதல், அணிவகுப்பு நடைபயிற்சி மற்றும் தனி ஒழுக்கப் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பாக பயிற்சி மேற்கொள்ளும் மாணவ மாணவிகள்  டெல்லியில் நடைபெறும் சிறப்பு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்