சேலம் : காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவிரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் குழாயை ஒப்பந்ததாரர் அடைத்துவிட்டதாக புகார் கூறிய அவர்கள், இதனால் கடந்த 2 மாதங்களாக குடிநீரின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்தனர். மேலும், வசதிபடைத்தவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Next Story