சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? - ராமதாஸ் கேள்வி

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; பேரறிவாளனுக்கு ஒரு நீதியா? - ராமதாஸ் கேள்வி
x
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மத்திய அரசு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கடந்த மூன்றரை ஆண்டுகளாக கண்டுகொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது ஐயங்களை ஏற்படுத்தியுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி 7 தமிழர்களையும், நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்