தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம்
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
கொடைக்கானலில் நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தமிழ் மாநிலக்குழு கூட்டத்தில், பங்ககேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாமல் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி இருப்பதால்,தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து அரசு போர்க்கால் அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
Next Story