கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் - சீர் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் கரைகள் சரிந்து உள்ளதால் பூண்டி ஏரிக்கு வரும் நீர் வரத்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
x
சென்னைக்கு குடிநீர் வரும் கிருஷ்ணா கால்வாயில், பல இடங்களில் கரைகள் சரிந்து உள்ளதால் பூண்டி ஏரிக்கு வரும் நீர் வரத்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு தேவைப்படும் போது சென்னை குடிநீருக்கு திறந்து விடப்படும். இந்நிலையில் ஊத்துக்கோட்டையில் இருந்து பூண்டி ஏரி வரை கிருஷ்ணா கால்வாய்கள் பெருமளவு சேதம் அடைந்து காணப்படுகிறது.   இன்னும் இரண்டு மாதங்களில் தண்ணீர் திறந்துவிட உள்ள நிலையில் , இதனை உடனடியாக சீர்செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்