போலீஸ் உடையில் டிக்டாக் செய்த நபர் கைது : ஜாதியை தூண்டியதாக வழக்கு பதிவு

மதுரை திருப்பரங்குன்றத்தில், போலீசார் போன்று உடையணிந்து டிக் டாக் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் உடையில் டிக்டாக் செய்த நபர் கைது : ஜாதியை தூண்டியதாக வழக்கு பதிவு
x
மதுரை திருப்பரங்குன்றத்தில், போலீசார் போன்று உடையணிந்து டிக் டாக் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓம்சக்தி நகரை சேர்ந்த சரவணன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சார்பு ஆய்வாளர் போல உடையணிந்து டிக் டாக் எனும் சமூக வலைதளத்தில் ஜாதியை தூண்டும் விதமாக நடித்ததாக வந்த புகார் எழுந்தது. இது குறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் சரவணனை கைது செய்த போலீசார், ஜாதியை தூண்டியது உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்