"ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும்" : பி.ஆர்.பாண்டியன்

ராசிமணலில் புதிய அணை கட்டும் பணியை விவசாயிகளோடு திறண்டு சென்று தொடங்க உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும் : பி.ஆர்.பாண்டியன்
x
நாகை மாவட்டம்  பூம்புகாரில் தமிழக காவிரி பாதுகாப்பு விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன்   பங்கேற்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொதுப்பணித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி, மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார். மேகதாதுவில் அணை கட்டுமான பணிகளை கர்நாடக அரசு கைவிட்டு, தமிழக எல்லை ராசிமணலில் அணையை கட்டி, தமிழகம் மற்றும் கர்நாடகம் பயன்படுத்தி கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போட வேண்டும் என்றார். இதை வலியுறுத்தி ஜூன் 12ம் தேதி, ராசிமணலில் புதிய அணை கட்டும் பணியை விவசாயிகளோடு திரண்டு சென்று தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்