குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.
x
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள், சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மோசமாக இருந்த சாலையை செப்பனிட ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. அவை தற்போது கிடப்பில் உள்ளதால், கற்கள் பரப்பிய சாலையில் பயணிக்க முடியாமல் பெரும் அவதியடைந்துள்ளனர். பேருந்து மற்றும் வாகனங்களிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீரும், சாலையும் இன்றி அவதிப்படும் தங்கள் கோரிக்கைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என  கிராமத்தினர்  வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்