"3 கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை" - ஸ்டாலின் பேச்சு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர், ஓட்டபிடாரம் ஆகிய பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
3 கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை - ஸ்டாலின் பேச்சு
x
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர், ஓட்டபிடாரம் ஆகிய பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்ததற்கும், ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது ஏன் என்பதற்கும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிகள் மிரட்டியது ஏன் என தான் கேட்ட மூன்று கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி, இதுவரை பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்