800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது
கோவையில், தனியார் நிதி நிறுவனத்தில் 800 சவரன் நகை கொள்ளை போன வழக்கில், பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நுழைந்த முகமூடி கொள்ளையன், அங்குள்ள பெண்களை தாக்கி 800 சவரன் நகையை திருடிச் சென்றான். இது தொடர்பாக பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த கோவை போலீசார், 4 தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். இந்நிலையில், கேரளாவில் பதுங்கியிருந்த கொள்ளையன் சுரேஷை காவல்துறையினர் கைது செய்து, அவனிடமிருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் நாடகமாடிய பெண் ஊழியர் ரேணுகா-வும் கைது செய்யப்பட்டார். இருவரும் திட்டமிட்டு நகை கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story