வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
x
தேர்தல் முடிவடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள மற்றொரு அறைக்குள் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்ட 3 பேர் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த அறையில் சுமார் 3 மணிநேரம் இருந்து ஆவணங்களை  பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு சென்ற மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமுமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனிடம், அவர்கள்  புகார் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்