4 தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
x
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொருளாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக,  திருப்பரக்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் இ.பெரியசாமி, மணிமாறன் மற்றும் உறுப்பினர்கள், ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்களுடன் நடந்த ஆலோசனை நிறைவுபெற்றது. அடுத்ததாக, அரவக்குறிச்சி, சூலூர் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்