"அமைச்சர் திறந்து வைத்த ஆழ்துளை கிணற்றை காணவில்லை" : கிராம மக்கள் தர்ணா

மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மங்கம்மாள்பட்டி கிராமத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தொடங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் திறந்து வைத்த ஆழ்துளை கிணற்றை காணவில்லை : கிராம மக்கள் தர்ணா
x
மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட மங்கம்மாள்பட்டி கிராமத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் கிணற்றைக் காணவில்லை என்றும், சாலை, குடிநீர் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறியும் அந்தக் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,  வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க போவதாக அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்