விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 11 பேர் கைது

மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 11 பேர் கைது
x
மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்க இலாகா அதிகாரிகளுக்கு  கிடைத்த ரகசிய தகவலின் படி, கொழும்பு, துபாய், மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பியவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் 11 பேர் தங்கள் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்த, சுமார் 3 கிலோ 150 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்