வாகன சோதனை -175 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் சோதனை சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மினி வேனில் கொண்டு செல்லப்பட்ட 56 கோடி ரூபாய் மதிப்பிலான 175 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது.
வாகன சோதனை -175 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கின
x
போலீஸ் விசாரணையில், அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் இருந்து தங்ககட்டிகளை இறக்குமதி செய்து, இந்தியா முழுவதும் அந்த தங்கத்தை சப்ளை செய்து வருவது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இருந்தும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கண்டறியவும், முறையான அனுமதியுடன் தான் இந்த தங்க கட்டிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்டறியவும் கும்மிடப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்