குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
x
துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கான இந்த கொள்குறி வகை போட்டித் தேர்வு, கடந்த மார்ச் மூன்றாம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில்,181 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வின் முடிவுகளை தேர்வு நடந்த ஒரு மாதத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முதன்மை தேர்வு எழுத தேர்வு செய்யப்பட்ட 9850 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல், டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்னப்பதாரர்கள் வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் தங்களது மூலச் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்