ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
x
லஞ்ச வழக்கு ஒன்றை விசாரித்த,  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர் கொள்ள வேண்டி உள்ளதாகவும், தற்போது, லஞ்சத்திற்கு பதிலாக இச்சைக்கு இணங்க செய்யும் துரதிருஷ்டவசமான நிலையும்  உள்ளதாக வேதனை தெரிவித்தார். ஊழலுக்கு நீதித்துறையும்  விதிவிலக்கு அல்ல என்று தெரிவித்த நீதிபதி, ஊழல் செய்யும் நீதித்துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும்,  இவர்களால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதாகவும் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்