வேட்பு மனு தாக்கலின் போது சலசலப்பு : போலீசாருடன் காங்கிரஸ், திமுகவினர் வாக்குவாதம்

கரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்த போதே காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
வேட்பு மனு தாக்கலின் போது சலசலப்பு : போலீசாருடன் காங்கிரஸ், திமுகவினர் வாக்குவாதம்
x
கரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்த போதே காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த  நிலையில், அரை மணி நேரமாகியும் அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்து முடிக்காததால், பொறுமையை இழந்த ஜோதிமணி அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்டார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் காங்கிரஸ், தி.மு.க. கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்