"பாரபட்சமின்றி சட்ட கடமையை நிறைவேற்றிட வேண்டும்" - தேர்தல் ஆணையத்தை ஸ்டாலின் கோரிக்கை

பாரபட்சமின்றி, அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றிட முன் வர வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாரபட்சமின்றி சட்ட கடமையை நிறைவேற்றிட வேண்டும் - தேர்தல் ஆணையத்தை ஸ்டாலின் கோரிக்கை
x
பாரபட்சமின்றி, அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றிட முன் வர வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலை நடத்துவதற்கே, சட்ட போராட்டம் நடத்த வேண்டிய நிலை தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கால் ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியினரின் விதிமீறல்களை, ஏற்றுக் கொண்டு எதிர்கட்சியினர் மீது விதிமீறல் வழக்குகளை பதிவு செய்து வருவதாக அவர் குறை கூறியுள்ளார். திமுகவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகளையும், 3 ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவர்களையும் தாமதமின்றி மாற்றி நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்