பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : போராட்டத்தை தடுக்க 4 கல்லூரிகளுக்கு விடுமுறை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க, 4 கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் : போராட்டத்தை தடுக்க 4 கல்லூரிகளுக்கு விடுமுறை
x
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்ககோரியும், கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தடுக்க, 2வது நாளாக 4 கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 2 ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பி தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீசார் 2-வது நாளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்