முகிலன் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் - சிபிசிஐடி

சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
x
சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து தகவல் அளிப்போருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.தூத்துக்குடி கலவரத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த மாதம் 15ஆம் தேதி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அது குறித்த வீடியோ காட்சிகளை சமூக செயற்பாட்டாளர் முகிலன் வெளியிட்டு இருந்தார்.  இந்நிலையில் மறுநாள் சென்னை எழும்பூர் ரயில்வே நிலையம் வந்த அவர், அதன் பின்பு காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், முகிலன் பற்றி தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என சென்னையில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில், சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்