நாளை தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு : 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
நாளை தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு : 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. தொடர்ந்து 29 ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 12.45 வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதில் மொழி பாடங்கள் மட்டும், பகல் 2 மணி முதல் 4.45 வரை நடத்தப்படுகின்றன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் அறை கண்ணாணிப்பாளர் மற்றும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக பறக்கும் படையினர் என சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசியர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்