கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி

சென்னை மாவட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்காக 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
நாடாளுமன்றம்  மற்றும் இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் பறக்கும் படை வீடியோ எடுக்கும் குழுவினருடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் அமைக்கப்படும் என்றும் 24 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார். பள்ளி, கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே பிரசாரம் செய்ய கூடாது என அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்